யாழ்.மாவட்டத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளை இலக்குவைத்து கொள்ளை..! 22 வயதான பிரதான சந்தேகநபர் உட்பட, 7 பேர் பொலிஸாரினால் அதிரடியாக கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளை இலக்குவைத்து கொள்ளை..! 22 வயதான பிரதான சந்தேகநபர் உட்பட, 7 பேர் பொலிஸாரினால் அதிரடியாக கைது..

யாழ்.மாவட்டத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளை இலக்குவைத்து வாள்களை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 18 தங்க பவுண் நகைகள் மற்றும் பணம், வாள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கியை விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

என்று யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் 

மற்றும் பணம் கொள்ளையிட்டுத் தப்பித்தனர். அந்த கொள்ளை உள்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் 

பிரதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நல்லூரைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன். அவரிடமிருந்து கொள்ளையிட்ட நகைகளை வாங்கியமை, 

விற்றுக் கொடுத்தமை மற்றும் அடகு பிடித்தனர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தே நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்,

மேனன், தலைமையிலான கவி அணியே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு