யாழில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியர் பொலிஸாரால் கைது
யாழ். கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய இரு அச்சு இயந்திரங்களையும், மடிக்கணினி ஒன்றினையும், வருடி(scaner) ஒன்றினையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
மேலும், 5,000ரூபா நாணயத்தாள்கள் 400, 1,000ரூபா நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதலில் சந்தேக நபரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், பின்னர் குறித்த 24 வயதுடைய குறித்த சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளதோடு, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.