பயங்கரவாதி போல அடையாளப்படுத்தப்பட்டார் யாழ். முதல்வர்!

ஆசிரியர் - Admin
பயங்கரவாதி போல அடையாளப்படுத்தப்பட்டார் யாழ். முதல்வர்!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. பயங்கரவாதியை போன்றே முதல்வர் அறிமுகப்படுத்தப்பட்டார். பொய்யான பயங்கரவாதப் பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே. 

யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதி போலச் சித்திரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இன்னும் அறியப்படாது உள்ளனர். புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு