முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!

ஆசிரியர் - Admin
முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!

நம் உடலுக்கு முருங்கை கீரையின் சத்து மிகவும் அவசியமானது. இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ள முருங்கையை உண்டால் சிறுநீரகம் பலப்படும், தாதுவும் பெருகும்.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.

*முருங்கைக் காயில் உள்ளது போலவே அதன் கீரையிலும் ஆண்களுக்கான பிரத்யேக சத்து இருக்கிறதாம். இதனால் தான் இந்த கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.

உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.

*முருங்கைக் காயில் உள்ளது போலவே அதன் கீரையிலும் ஆண்களுக்கான பிரத்யேக சத்து இருக்கிறதாம். இதனால் தான் இந்த கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.

முருங்கைக் கீரையின் கூடுதல் நன்மைகள்:

முருங்கை இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடலில் ரத்தம் ஊறும், பல் கெட்டிப்படும், முடி நீண்டு வளரும்.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் உள்ளிட்ட நோய்களும் குணம் அடைகின்றது.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கைக் கீரையை வாரத்தில் இருமுறை சாப்பிட்டால் வாய்ப்புண் வராதபடி பாதுகாக்கிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு