வீதியால் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான கனரக வாகனம்..! 3 பெண்கள் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
வீதியால் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான கனரக வாகனம்..! 3 பெண்கள் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில்..

கனரக வாகனத்தின் பிறேக் செயலிழந்த நிலையில் வீதியால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் பிறேக் தொகுதி  செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக 

நுவரெலியா காவல்துறையினர் தொிவித்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 

அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு