ஜேர்மனில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இலங்கையில் சித்திரவதை ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்..! சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..

ஆசிரியர் - Editor I
ஜேர்மனில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் இலங்கையில் சித்திரவதை ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்..! சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..

ஜேர்மனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடயத்திலும், ஜேர்மன் அரசின் தீர்மானத்திலும் தாம் அதிகம் கவலையடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஜேர்மனியிலிருந்து தமிழர்களை நாடு கடத்துவதை நிறுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் கண்காணிக்கப்படுதல் தடுத்துவைக்கப்படுதல் சித்திரவதை போன்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜேர்மனி மனித உரிமைகளை நிலைநாட்ட தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு