இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியதீவுகள்!!

ஆசிரியர் - Editor II
இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மேற்கிந்தியதீவுகள்!!

இலங்கை அணியை இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று மேற்கிந்தியதீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 

முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மேற்கிந்தியதீவுகள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் சண்டிமால் 74 ஓட்டத்துடன் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ஹசரங்கா அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 47 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்கள் பெற்றது. 

மேற்கிந்தியதீவுகள் தரப்பில் ஜேசன் மொகமது 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 274 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியதீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிசும், சாய் ஹோப்பும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை சேர்த்தது.

எவின் லெவிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 103 ஓட்டத்துடன் வெளியேறினார். சாய் ஹோப் 84 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், மேற்கிந்தியதீவுகள் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு வழங்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு