தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரு நாளில் மட்டும் 481 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!! -ஒரு நாளில் மட்டும் 481 பேருக்கு தொற்று-

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இதற்கு முன்னரான நாட்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு