யாழ்.மாநகரசபை அமர்வில் மதுபோதையில் கலந்துகொண்டாரா தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்..? மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்ட முதல்வர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகரசபை உறுப்பினர் சபை அமர்வில் தேனீர் இடைவேளைக்கு பின்னர் மதுபானம் அருந்திவிட்டு கலந்து கொண்டதாக சக உறுப்பினர் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து குறித்த உறுப்பினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, யாழ்.மாநகரசபை அமர்வு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தேனீர் இடைவேளைக்கு பின் மதுபானம் அருந்திவிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபானம் அருந்திவிட்டு வந்துள்ளதாக

ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டதுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து மாநகரசபை மருத்துவ அதிகாரியை அழைத்த முதல்வர் குறித்த உறுப்பினரை மருத்துவ பரிசோதனை 

செய்யுமாறு பணித்திருந்தார். எனினும் சட்ட வைத்திய அதிகாரியே அந்த பரிசோதனையை செய்யவேண்டும். என மாநகரசபை மருத்துவ அதிகாரிய கூறிய நிலையில் உடனடியாக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்யும்படி முதல்வர் கூறினார்.

ஆனால் குற்றச்சாட்டுக்குள்ளான குறித்த மாநகரசபை உறுப்பினர் தான் மன வருத்தம் அடைந்துள்ளதாக கூறியதுடன் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு