யாழ்.சுழிபுரத்தில் கஞ்சாவுடன் இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது..!
யாழ்.சுழிபுரம் பகுதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தில் கேரள கஞ்சாவை எடுத்துச் செல்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டது.
சம்பவத்தில் ஒரு கிலோவுக்கு அதிகமான கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.