கர்பவதி பெண் ஒருவருக்கும், கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் ஒருவனுக்கும் கொரோனா தொற்று..! வடக்கில் ஒரு கிராமம் முடக்கப்படும் அபாயம்..

ஆசிரியர் - Editor I

வவுனியா மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த இருவரும் வவுனியா- பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் என கூப்படுகிறது.

குறித்த பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு