புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கேக் வெட்டியதால் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பதற்றம்

ஆசிரியர் - Admin
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கேக் வெட்டியதால் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பதற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் இன்றைய தினம்(26) பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தமது விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அதை அவதானித்த சிங்கள மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

எனினும், விடுதி மேற்பார்வையாளர் இரு பிரிவினரையும் சமரசம் செய்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, வவுனியா வளாகத்தின் குருமன்காடு கற்கைகள் பீடத்திலும் இதே சம்பவம் இடம்பெற்ற நிலையில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு இரவு 9 மணியளவில் வருகைத் தந்த சிங்கள மாணவர்கள் கேக் வெட்டிய மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வவுனியா வளாகத்தில் அண்மைக்காலமாக சிங்கள மாணவர்களே அதிகமாக கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு