பறந்தது புலிக்கொடி!
வல்வெட்டித்துறையில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னிச்சி அம்மன் கோயில் பகுதிக்கு அண்மையிலேயே இவ்வாறு புலிக்கொடி ஒன்று பறக்க விடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினத்தை முன்னிட்டே இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.