பகுதி நேர வேலையாக பிச்சை..! அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும், வீதி சமிக்ஞை விளக்குகளில் பிச்சை கொடுக்க தடை - பொலிஸ்

ஆசிரியர் - Editor I

வீதி சமிக்ஞை விளக்கு பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை உண்டாக்கும் வகையில் யாசகர்களுக்கு யாசகம் வழங்குவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். என பொலிஸார் எச்சரித்துள்ளனர். 

சாரதிகள் மற்றும் பயணிகள் வீதி சமிக்ஞை விளக்கு பகுதியில் யாசகம் வழங்குவதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடி உணரப்பட்டிருக்கும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் அடிப்படை சம்பளத்துடன் வேலை செய்யும் சிலர் பகுதிநேர வேலையாக பிச்சை எடுப்பதும் அறியப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், அவ்வாறான யாசகர்களை அடையாளம் கண்டு 

அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு