கடன் வாங்கி அபிவிருத்தி சாத்தியமாகுமா..? 2021ற்கான வரவு செலவுத்திட்டம் அதைத்தான் கூறுகிறது..! தமிழ்தேசிய கூட்டமைப்பின் முடிவை அறிவித்தார் இரா.சம்மந்தன்..

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மிக மோசமான ஒரு வரவு செலவு திட்டமாகும். என தமிழ்தேசிய கூட்டமைப்பு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 

இது குறித்து கட்சியின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் கூறுகையில், நேற்றய தினம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 

நாட்டையும் மக்களையும் மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது. ஏற்கனவே நாடு பாரிய கடன் பொறிக்குள் அகப்பட்டு சர்வதேசத்திடம் தொடர்ந்து கையேந்தும் நிலையில் உள்ளது. 

இந்தநிலையில் மிகவும் மோசமான வரவு செலவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. நாடு கடன் பொறியில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அபிவிருத்தி எப்படி சாத்தியமாகும்? 

இது நாட்டு மக்களை ஏமாற்றும் மிகவும் மோசமான வரவு செலவுத் திட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இதனூடாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மீது மேலும் சுமைகளை அரசு ஏற்றியுள்ளது.

இந்த வரவு  செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கவேமாட்டோம். நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு