பெற்றோர்கள், மாணவர்கள் தயாராகுங்கள்..! நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் திறக்கப்படுகின்றது..

ஆசிரியர் - Editor I

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் 23ம் திகதி அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படுவதாகவும், 

மாணவர்களை ஒரே நேரத்தில் பாடசாலைக்கு அழைக்காமல் இரு கட்டங்களாக அழைப்பதெனவும், சகல பாடசாலைகளும் கிருமி நீக்கம் செய்த பின்பே பாடசாலைகளை ஆரம்பிப்பதெனவும் பேசப்பட்டிருந்தாப அந்த செய்திகள் தொிவிக்கின்றன. 

எனினும் 23ம் திகதியை அண்மித்த நாட்களில் நாட்டில் உள்ள கொரோனா இடர்நிலைமையினை கருத்தில் கொண்டு முடிவுகள் மாறலாம் எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு