யாழ்.பருத்துறை கொரோனா தொற்றாளர் கடந்த 24ம் திகதிவரை சமூகத்தில் நடமாடியுள்ளார்..! பயண விபரம் வெளியானது, தொடர்பு பட்டிருப்பின் உங்களை வெளிப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கடந்த 24ம் திகதிவரை சமூக மட்டத்தில் நடாடியமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், 

அவர் பொது போக்குவரத்தில் பயணித்த வழித்தடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த வழித்தடங்களில் 

கீழ் குறிப்பிடப்படும் திகதிகளில் பயணம் செய்தவர்கள் உங்களை அடையாளப்படுத்தி சமூகத்தையும், உங்களையும் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

பயண விபரம்.

பருத்தித்துறை - மயிலிட்டி - கீரிமலை வழித்தட பயணிகள் கவனத்திற்கு. கொரோனா தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர் சென்ற இடங்கள்

21/10/2020- பருத்தித்துறை - ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி

22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்

23/10/2020 பலாலி வடக்கு அன்ரனிபுரம் ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்

1-  22/10/2020 - பருத்தித்துறை - கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு பொலிகண்டியில் இருந்து - பலாலிக்கு 

2- 24/10/2020-கீரிமலை - பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு 

பகல் - 6.30 க்குகுறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்தவும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு