இன்று மட்டும் 26 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்..! கிழக்கில் அவசர நிலமையினை மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என சுகாதார பிரிவு அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இன்று காலை வெளியான முடிவுகளின் படி 

மட்டக்களப்பில் - 11 பேரும்

கல்முனை-09 (இவர்கள் கல்முனை, பொத்துவில், நித்தவூர் உள்ளவர்கள்)

திருகோணமலை-06, பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்த நிலையினை தீவிரமான கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண மக்கள் சுகாதார ஆலோசனையை பின்பற்றுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கோரியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு