நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து மிக கொச்சையாக ருவிட்டர் பக்கத்தில் கருத்து தொிவித்த இலங்கை பிரஜையை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடுகிறது இந்தியா..!

ஆசிரியர் - Editor I
நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து மிக கொச்சையாக ருவிட்டர் பக்கத்தில் கருத்து தொிவித்த இலங்கை பிரஜையை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடுகிறது இந்தியா..!

இந்திய சினிமா நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையை கைது செய்வதற்கு தமிழக பொலிஸார் இன்டர்போலின் உதவியை நாடவுள்ளனர். 

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பட்டிருந்த நிலையில், 

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக தனது ருவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரஜை ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தமை பல்வேறு மட்டங்களில்

தீவிரமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் குறித்த நபருடைய ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கிடையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார், 153, 294(பி),Ipc 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். 

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்ததாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு