வடமாகாண மக்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு..! ஹம்பகா மாவட்டத்துடன் தொடர்புடையவர்கள் இருப்பின் அடையாளப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I

ஹம்பகா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் வடமாகாணத்தின் எந்த பாகத்தில் இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். 

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கேட்டுள்ளார். இது தொடர்பில் ஆளுநரின் ஊடக பிரிவு விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கம்பஹா, மினுவாங்கொட ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கோரோனா தொற்றாளர்களின் கொத்தணி, 

நாடுமுழுவதும் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தங்களுடைய தகவல்களை மறைப்பதனால் அவர்களுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் மிகக்கடுமையான சவாலை சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் யாரேனும் வடமாகாணத்தின் எப்பிரதேசத்தில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்குமாறும் 

தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வடமாகாண மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு