பிரபல பாடசாலை ஒன்றின் மலசல கூடத்திற்குள் போதையில் மிதந்த மாணவர்கள் 4 பேர் கைது..! கிளிநொச்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்றய தினம் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்றிருந்த பொலிஸார் குறித்த மாணவர்கள் 4 பேரையும் கைது செய்திருப்பதுடன், அவர்களிடமிருந்த போதைப் பொருளையும் மீட்டுள்ளனர். 

குறித்த 4பேரும் பாடசாலை மலசல கூடத்திற்குள் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு