பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் 7.30 மணியே.

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் 7.30 மணியே.

வடக்கு மாகாணப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களில் மற்றும் மாணவர்களின் ஆடைகள் என்பனவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பில் நேற்றைய மாகாண சபை அமர்வில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் 117 ஆவது அமர்வு நேற்றையதினம் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற போது மாகாண பாடசாலைகளை 8 மணிக்கு மீள ஆரம்பிப்பது என்பது குறித்து ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன் போது எழுந்த கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் வடக்கு மாகாணப் பாடசாலைகள் முன்னர் 8 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு 7.30 ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. அதில் மீளவும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென கடந்த அமர்வகளின் போது குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றதாகச் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகள் 7.30 ஆரம்பிப்தால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதுடன் பல பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கின்றதாக அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார். இதே கருத்தை முன்வைத்த அவைத் தலைவர் சிவஞானமும் பாடசாலைகளை 8 மணிக்கே மீளவும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது குறுக்கிட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பாடசாலைகளை 7.30 மணிக்கு ஆரம்பிப்தில் முன்னர் இடையுறுகள் எதிர்ப்புகள் இருந்த போதும் அதனை பின்னர் பலரும் வரவேற்றிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் மீளவும் பாடசாலைகளை பழைய நேரத்திற்கு மாற்றுதவன் மூலமாக சீரான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியுமா என்றும் கேள்யெழுப்பினார். 

பாடசாலை நேரங்களில் மாற்றங்கள் வேண்டுமென கடந்த அமர்வுகளின் போது சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமை அல்லது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்த சபைக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் எனவே தற்பொதைய நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அமைச்சர் மீளாய்வு செய்ய வேண்டுமென்றும் சிவஞானம் குறிப்பிட்டார். 

இவ்வாறு பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்த நிலையில் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுத்து அடுத்த அமர்வில் தெரியப்படுத்தப்படுமென அமைச்சர் சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை மாகாண பாடசாலை மாணவர்களின் ஆடைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய நடைமுறைகள் ஏற்படுத்துவது குறித்தும் இதன் போது பரிசீலிக்கப்பட்டது. அது குறித்தும் கலந்துரையாடி இறுதி முடிவை அடுத்த அமர்வில் அறிவிப்பதாக அமைச்சர் சர்வேஸ்வரன் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு