வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு!

ஆசிரியர் - Editor II
வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே இன்று காலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது.

எனினும் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முதலமைச்சரின் தரப்பு இதுகுறித்த தகவலினை வழங்க மறுத்துவிட்டது.

இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்ளிட்ட 4 பேர் பங்கேற்றனர் என அந்தத் தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Share this article

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...
Today's 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு