தமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது..! எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது..! எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..

தமிழரசு கட்சியின் தலமைப்பதவி வழங்கப்பட்டால் அதனை பொறுப்பேற்பதற்கு நான் தயாராக உள்ளேன். என சிவஞானம் சிறீதரன் கூறியிருக்கின்றார். 

இன்று காலை அவருடைய கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. 

இன்னுமொரு தலைமையை தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. 

தமிழரசு கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. 

தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் என கூறுவது பொருத்தமற்றது. தமிழரசு கட்சியில் இளம் இரத்தம் பாச்சப்பட வேண்டும். 

மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமை பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அனைத்து உறுப்பினர்களும், 

மக்களும் இணைந்து ஒருமித்து கோரினால் அந்த தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன். அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி இன்னொருவரது 

பதவியை பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு