தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழந்த குரூரம்..! கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்து..

ஆசிரியர் - Editor I
தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழந்த குரூரம்..! கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்து..

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வாய்க்கால் ஒன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் தாயும், இரு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் வெயங்கொட- குடல்ஒலுவ பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒன்றரை வயது மற்றும் 9 வயது பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய தாயும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தாயே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவருக்கு நித்திரை ஏற்பட்டதான காரணமாக 

குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு