க.பொ.த உயர்தர பரீட்சை இன்னும் சில மணி நேரங்களில் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்..!

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை இன்னும் சில மணி நேரங்களில் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்..!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பான இறுதி முடிவு இன்று காலை கல்வியமைச்சினால் வெளியிடப்படும் என அமைச்சு தொிவித்திருக்கின்றது. 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையினை செப்டெம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்த கல்வியமைச்சு திட்டமிட்டிருந்தது. எனினும் மாணவர்கள் உட்பட பல பிரிவினர் 

பரீட்சையினை மேலும் ஒத்தி வைக்குமாறு வலியுறத்தியிருந்தனர்.இந் நிலையில் கல்வி அமைச்சு இது தொடர்பாக பாடசாலை மட்டத்திலும் இணையத்தளமூடாகவும் கருத்துக்களை கோரியிருந்தது.

அதன்படி, இது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு