வடக்கு- கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்ள நடவடிக்கை! - மகிந்த ராஜபக்ச

ஆசிரியர் - Admin
வடக்கு- கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்ள நடவடிக்கை! - மகிந்த ராஜபக்ச

வடக்கு- கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில், இன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

“தெற்கு மக்களின் ஆதரவுடனே ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொண்டோம் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். இருப்பினும் அனைத்து இன மக்களின் தலைவராகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.

எமது ஆட்சியில் வடக்கு,கிழக்கு வாழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதில்லை. அவர்களையும் இணைத்துக் கொண்டே அரசியல் ரீதியில் பயணிப்போம். வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்” என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு