12 பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது..! வாகனங்கள், ஆயுதங்கள், தொழிநுட்ப கருவிகள், பெருந்தொகை பணம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
12 பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது..! வாகனங்கள், ஆயுதங்கள், தொழிநுட்ப கருவிகள், பெருந்தொகை பணம் மீட்பு..

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருங்கிய உறவை பேணியதுடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த 12 பொலிஸ் அதிகாரிகளும் சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக இதே பொலிஸ் பணியக பொலிஸார் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து வாகனங்கள், ஆயுதங்கள், தொழில்நுட்ப கருவிகள் உட்பட பெருந் தொகை பணம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு