இலங்கையில் தொடர்ந்து தாண்டவமாடும் கொரோனா..! தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் தொடர்ந்து தாண்டவமாடும் கொரோனா..! தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2054 ஆக உயர்ந்திருக்கின்றது. 

தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களிலும் இருந்து தொடர்ச்சியாக தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சுகாதார அமைச்சின் தகவல்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 2054 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 295 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

மேலும் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1748 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல் நாட்டில் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு