நல்லை ஆதின குரு முதல்வர்களிடம் ஆசி பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஆசிரியர் - Admin
நல்லை ஆதின குரு முதல்வர்களிடம் ஆசி பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். 

இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனும் பங்கேற்றார்.

நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்கேற்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு