கருணாவை உள்ளே தள்ளுவேன்! - சஜித் கங்கணம்.

ஆசிரியர் - Admin
கருணாவை உள்ளே தள்ளுவேன்! - சஜித் கங்கணம்.

தமது கட்சி ஆட்சி அமைத்தால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ எமக்கு அனைத்தையும் கூறுவதற்கான சுதந்திரத்தை தேர்தல் அலுவலகம் தந்துள்ளது. எதையும் பேசலாம் கருணா கூறுகின்றார். ஆனால் அப்படி யாருக்கும் அனுமதி இல்லை. 

இந்த நாட்டில் 3000இராணுவ வீரர்களை கொலை செய்ததாக கருணா கூறுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு