பிரதமர் மஹிந்தவை அவசரமாக சந்தித்த வடக்கு ஆளுநர்!

ஆசிரியர் - Admin
பிரதமர் மஹிந்தவை அவசரமாக சந்தித்த வடக்கு ஆளுநர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை, வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் இன்று முற்பகல் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் இதன்போது, பேசப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு