தீயணைப்பு வாகன விவகாரம்..! ஜனாதிபதிக்கு யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் கடிதம்..

ஆசிரியர் - Editor I
தீயணைப்பு வாகன விவகாரம்..! ஜனாதிபதிக்கு யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் கடிதம்..

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்த நிலையில் மிக முக்கியமான தேவையாக உள்ள தீயணைப்பு வாகனம் ஒன்றை பெற்றுத்தருமாறுகோரி யாழ்.மாநகரசபை பிரதி மேயர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கோரிக்கைக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:கடந்த 16 ஆம் திகதி கடமையின்நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்கு பதிலளிக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு வீரர் பலியானதுடன் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இது வருத்தப்பட வேண்டிய விடயம். இதனால் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங்களுக்கு மாற்று வசதிஇல்லை என்பதால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு அவசரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை பெறுவதற்கு தங்களிடம் கோரியுள்ளேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு