யாழில் போலிசாரைப் பிடிப்பதற்கு போலிசாரே வந்த விசித்திரம் !
போலிசாரைப் பிடிப்பதற்கு போலிசார் வந்த விசித்திரம் யாழ்ப்பாணத்தில் உரும்பிராயில் நடைபெற்றுள்ளது.
கோவில் ஒன்றில் நீண்ட நேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப் பகுதி மக்கள் யாழ்வெட்டுக் குழுவினர் நிற்பதாக எண்ணி போலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த போலிசார் அவர்கள் சிவில் உடை தரித்த போலிசார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று உடும்பிராயில் இடம்பெற்றது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது என்னவென்றால்
உரும்பிராயில் இந்துக்கொவில் ஒன்றன் முன்றலில்; நேற்றிரவு 7 மணியளவில் ஒரு குழுவினர் நீண்ட நேரமாக நின்றிருந்தனர்.
அப்பகுதி மக்கள் அவர்கள் மேல் வாள் வெட்டுக் குழுவினர் எனச் சந்தேகம் கொண்டு போலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.