யாழில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

ஆசிரியர் - Editor II
யாழில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டப்படுத்த போலிசார் விசேட நடவடிக்கைகளை எடுத்தள்ளனர்.

இதன்படி 50 பேர் வரை கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினமும் இளைஞர்கள் இருவரை கோப்பாய் போலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கைது செய்திருந்தனர்.

யாழ் இராசபாதையில் முச்சக்கர வண்டியொன்றில் கூரிய வாளுடன் பயணித்த இரு இளைஞர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களிடம் போலிசார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படங்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வாள்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருக்கும் ஒளிப்படங்களும் இருந்துள்ளன.

இவர்கள் வடமராட்சியை தளமாகக்கொண்டு இயங்கும் தாரா எனும் குழுவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு