சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பி..! இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியது இலங்கை..

ஆசிரியர் - Editor I
சா்வதேசத்தின் முகத்தில் காறி துப்பி..! இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியது இலங்கை..

ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்ப ட்ட 40/1 மற்றும் 30/1, 34/1 ஆகிய தீர்மானங்களில் இலிருந்து விலகுவதாக இலங்கை வெளிவிவகா ர அமைச்சா் தினேஸ் குணவா்த்தன ஐ.நா பேரவையில் உத்தியோகபூா்வமாக அறிவித்துள்ளாா். 

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சுவிஸ் நேரப்படி முற்பகல் 10 மணிக்கு இலங்கை விவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்த ன உரையாற்றினார். இதன்போதே அவர் இந்த முடிவை 

சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். கடந்த அரசு அனைத்து ஜனநாயக நடைமுறைக ளையும் மீறியது. இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படவில்லை.

 நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த விடயம் தொடர்பில் ஆலோசிக்கப்படவில்லை இந்த விடயம் நடைமுறைக்கு சாத்தியமற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. எனவே கடந்த அரசால் 

இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் என்றும் தினேஸ் குணவர்த்தன தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு