யாழ்ப்பாணம் - கொடிகாமத்தை சேர்ந்த குடும்பஸ்த்தர் நாயாறு கடலில் மூழ்கி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கொடிகாமத்தை சேர்ந்த குடும்பஸ்த்தர் நாயாறு கடலில் மூழ்கி உயிரிழப்பு!

முல்லைத்தீவு - நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்று(28) மாலை கடலில் நீராடச்சென்ற நண்பர்களில் ஒருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டார்.

கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் இணைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று(29) காலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கொடிகாமம் பகுதியை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு