கல்வி அமைச்சர் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும்; தவராசா சாடல்!
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை ஏற்ற மறுத்தமை அவரது தவறான செயற்பாடே என வட மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சராக உள்ள அவர் மாணவர்களுக்கு முன்மாதிரிய செயற்படவேண்டும் என்றும் தவராசா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை வட மாகாண கல்வி அமைச்சர், தேசியக்கொடியை ஏற்றாமை குறித்து சட்ட மா அதிபரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே குறிப்பிட்டுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.