காலி, இரத்தினபுாி மாவட்டங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! இனமுறுகல் உண்டாகும் வாய்ப்பு..

ஆசிரியர் - Editor I
காலி, இரத்தினபுாி மாவட்டங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! இனமுறுகல் உண்டாகும் வாய்ப்பு..

காலி- தலாப்பிட்டிய, மற்றும் இரத்தினபுாி- கெட்டனிகேவத்த பகுதிகளில் இரு பள்ளி வாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கும் நிலையில், தொடா்ச்சியாக அந்தப் ப குதிகளில் பதற்றமான நிலை நீடிப்பதாக கூறப்படுகின்றது. 

நேற்று தாக்­குதல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது குறித்த பள்­ளி­வா­சல்­ களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாகவும் 

பொலிஸார் தெரி­வித்­தனர்.ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு வேளையில், காலி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தலா­பிட்­டிய பள்­ளி­ வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ளது. 

இந்நிலையில் சம்­பவ இடத்­துக்கு காலி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உள்­ ளிட்டோர் சென்று விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.நேற்று மாலைவரை சம்­ பவம் தொடர்­பி­லான சந்­தேக நபர் அல்­லது நபர்கள் அ­டை­யாளம் 

காணப்பட்­டி­ருக்­க­ வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த தாக்­கு­தலில் பள்­ளி­வா­சலின் யன்னல் கண்ணா­டிகள் சேத­ம­டைந்­துள்ள நிலையில், அது குறித்த விஷேட சட்ட நட­வ­ டிக்கை அவ­சி­ய­மில்லை என பள்­ளி­வாசல் தரப்பில் பொலி­ஸா­ருக்கு 

தெரி­விக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.இத­னி­டையே நேற்று இரத்­தி­ன­புரி மாவட்டம், நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகு­தியில் பள்­ளி­வாசல் மீது 

கல்­வீச்சு தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வந்­த­வர்கள் இந்த தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ள­தா­கவும் இதன்­போது பள்­ளி­வா­சலின் கண்­ணா­டி­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்­பவம் குறித்து நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நிலையில் நேற்று சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி 

 முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்­டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடாத்­து­வது வெளிப்­பட்­ட­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர்கள் கைது செய்­யப்பட்­ட­தா­கவும் பொலிஸார் கூறினர்.

நிவித்­தி­கல, கல­வான வீதியிலுள்ள குறித்த கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரில் ஒருவர் நிவித்திகல பகுதியில் மோட்டார் வாகன திருத்துநர் எனவும் சந்தேக நபர்கள்  

தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு