யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்..! 3 போ் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்..! 3 போ் காயம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தின் மீது லுனு ஓயா என்ற இடத்தில் வைத்து கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டதில் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட 3 போ் படு காயமடைந்திருக்கின்றனா். 

லுனு ஓயா என்ற இடத்தில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் வந்த நபர்களாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது யாழில் இருந்து கொழும்பு நோக்கி 

வந்த அரச பஸ் ஒன்று மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் சிறுகாயங்களுக்குள்ளான நிலையிலே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாகவும் , பஸ்சின் முன்பகுதி கண்ணாடிக்கே சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தூர குறுகிய தூர தனியார் பஸ் சாரதிகளுக்கிடையிலாள பகைமையே இக்கல்வீச்சுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக 

விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு