ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவின் ஆதரவாளா்கள் ஊடகவியலாளா் மீது தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவின் ஆதரவாளா்கள் ஊடகவியலாளா் மீது தாக்குதல்..!

காலி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளா் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளா்கள் ஊடகவியலாளா் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டையும் சேதப்படுத்தினா். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் மூவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை  பொலிஸ ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியிருக்கின்றாா். 

அவரது வீட்டிலிருந்த பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு