1.950 கிலோகிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் கைது..! இயக்கச்சியில் இன்று காலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
1.950 கிலோகிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் கைது..! இயக்கச்சியில் இன்று காலை சம்பவம்..

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் 1.950 கிலோகிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். 

இயக்கச்சி பகுதியில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த இளைஞன் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுளான். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ் வடமராட்சி கிழக்கு கேவில் பகுயில் இருந்து வெளிமாவட்டத்திற்கு கஞ்சாவினை கடத்த 

முற்பட்ட போதே குறித்த இளைஞன் விசேட அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளான் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் 

கட்டைக்காடு கேவில் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் என்றும் குறித்த இளைஞனிடம் இருந்து 1950 கிலோக்கிராம் கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது. 

என விசிசேட அதிரடி படையினர் கூறியதுடன கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 

மேலதிக விசாரனையை பளை பொலிசா மேற்கொண்டு வருகின்றனர்;.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு