கணவனை பொல்லால் அடித்தே கொலை செய்த மனைவி..! மட்டக்களப்பில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கணவனை பொல்லால் அடித்தே கொலை செய்த மனைவி..! மட்டக்களப்பில் சம்பவம்..

மட்டக்களப்பு- வாழைச்சேனை பகுதியில் கணவன் மீது கோபமடைந்த மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் உயிாிழந்துள்ளாா். 

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரத்திலேயே குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

நீண்டநாள் குடும்பத் தகராறே குறித்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து மனைவி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் வாழைச்சேனை கண்ணகிபுரம் 

3 ஆம் குறுக்கைச் சேர்ந்த 36 வயதுடைய மாரிமுத்து சுரேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் 

வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு