மீண்டும் பாரிய சிங்கள குடியேற்றத்திற்கு சதி.

ஆசிரியர் - Editor I
மீண்டும் பாரிய சிங்கள குடியேற்றத்திற்கு சதி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக “ஹிபுல் ஓயா”என்னும் பெயரில் பாரிய நீர்பான திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள், மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும், மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 115வது அமர்வில் விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்து கருத்து தெரிவிக்கும்போது கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

முல்லை மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன்குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென் பண்ணை, வெடிவைத்த கல்லு, மயிpல் குளம்,, மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்க ள குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்பாசன திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடை குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம், ஆகிய குளங்கள் மூடப்படுகிறது. மேலும் இந்த குளங்களின் நீர்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நி லங்களையும், விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவது காணப்படுகின்றது. மேலும் ஹிபுல் ஓயா திட்டதின் ஊடாக

புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காக கொண்டிருக் கின்றது. முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்பாசன திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்த குளங்களின் கீழான நீர்பானம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந் த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும். இந்த காணி

களுக்கான ஆவணங்களையும் மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்க ளை வழங்கினார். அந்த மயில் குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும், இனிமேல் குடியே ற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்பா

சன திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிக ஆபத்தான ஒன்றாகும். மிக வேகமாக பரவிவரும் சிங்கள குடியேற்றம் இந்த திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது. 1948ம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வடகிழ க்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959ம் ஆண்டு அம்பாறை சிங்கள பிரதேசமும், 1977ம் ஆண்டு சேருவில சிங்கள பிரதேசமும்

உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்ற ன. இது நல்ல உதாரணம் இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3336 குடும்பங்களை சேர்ந்த 11189 நபர்களை கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மதரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு