யாழ் சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்

ஆசிரியர் - Editor II
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை நாளை ஆரம்பமாகவுள்ளது.

யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த வர்த்தக சந்தை நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

9வது முறையாக நடைபெறவுள்ள இந்த வர்த்தக சந்தையில் இந்தியாவின் வர்த்தக தொழிற்துறையின் மன்றங்களை ஒன்றிணைத்த அசோக் சாம் அமைப்பிலுள்ள 75 நிறுவனங்கள் இம்முறை நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன.

இக் கண்காட்சியில் 300க்கு மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இடம்பெறவுள்ளதாகவும் உள்ளுர் உற்பத்தி தயாரிப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு கண்காட்சி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு