யாழில் கர்ப்பிணி பெண் படுகொலை: வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்

ஆசிரியர் - Editor II
யாழில் கர்ப்பிணி பெண் படுகொலை: வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்

யாழில் ஊர்காவற்துறை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் தொடர்பான வழக்கு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த வழக்கினை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தை மாதம் 24ஆம் திகதி ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணித் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கொலையுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழக்கு விசாரணைகளை கையளிக்குமாறு கடந்த ஒரு வருடமாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு