அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில்

ஆசிரியர் - Editor II
அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வேட்பாளர் சமரசம் செய்வதற்கு முயற்சித்த போதும் அதனை அமைச்சர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அமைச்சர் அனந்தி சசிதரனும் குறித்த வேட்பாளரும் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு