பயணிகள் பேருந்து மீது மோதிய இராணுவ வாகனம்..! முல்லைத்தீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பயணிகள் பேருந்து மீது மோதிய இராணுவ வாகனம்..! முல்லைத்தீவில் சம்பவம்..

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கு ம் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. 

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,நேற்று இரவு 8.30 மணி அளவில் பனிக்கன்குளம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பயணியை ஏற்றுவதற்காக கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி 

வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணியை ஏற்றிக்கொண்டு தனது பயணத்தை ஆரம்பிக்க முற்பட்டது.இதன்போது பின்னால் வந்த இராணுவ வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதால் 

பேருந்து சேதமடைந்துள்ளது.தெய்வாதீனமாக உயிரிழப்புகள் காயங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை 

மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு