ஒரு கோடியே 16 லட்சம் பெறுமதியான போதைப்போருள் யாழில் மீட்பு!

ஆசிரியர் - Editor II
ஒரு கோடியே 16 லட்சம் பெறுமதியான போதைப்போருள் யாழில் மீட்பு!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 112.6 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் இந்த கேரள கஞ்சாகைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 16 லட்சம் ரூபா எனமதிப்பிடப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லைஎன்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு