யாழில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி மாணவி பலி

ஆசிரியர் - Editor II
யாழில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி மாணவி பலி

புங்குடுதீவில் கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) மோதியதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு மகா வித்தியாலயம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை நடைபெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருலங்கன் கேசனா வயது 9 என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இன்று காலையில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

மோட்டார் சைக்கிளில் தனது மாமனாருடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே கடற்படையினரின்கவசவாகனம் மோதியுள்ளது . கடற்படையினருக்கான உணவுப்பண்டங்களை ஏற்றியிறக்கவே இந்த பவள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு